3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Saturday, March 29, 2014

தப்லீக் ஜமாஅத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்.

தப்லீக் ஜமாஅத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்.

மக்களை ஐந்து நேரத் தொழுகைகளுக்கு அழைக்கின்ற பணி நிச்சயமாக சிறந்த பணியாகும். இதை இன்றைய தப்லீக் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்கின்றனர். அதே சமயம் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, மக்கள் செய்கின்ற எண்ணற்ற தீமைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.

கப்ர் ஜியாரத் என்ற பெயரில் மக்கள் செய்கின்ற ஷிர்க் எனும் கொடிய பாவத்தைக் கண்டு கொள்வது கிடையாது. வட்டி, வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். சுருங்கக் கூறின் நன்மைகளை மட்டும் அதிலும் குறிப்பாக தொழுகையை மட்டும் ஏவுவார்கள். எந்தவொரு தீமையையும் தடுக்க முன்வர மாட்டார்கள்.

தீமையைத் தடுப்பது சாதாரண பணியல்ல. கை கால்களைப் பதம் பார்க்கக் கூடிய, கண்ணீரையும் செந்நீரையும் வரவழைக்கும் மிகக் கடினமான பணி என்பதை, செய்து பார்த்தால் தான் தெரியும். அதனால் தான் அல்லாஹ் அழைப்புப் பணியைப் பற்றிக் குறிப்பிடும் போது, நன்மையை மட்டும் ஏவுங்கள் என்று சொல்லாமல் தீமையையும் தடுக்கச் சொல்கின்றான்.(பார்க்க அல்குர்ஆன் 3-104, 3-114, 9-71)

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னால் யாரும் கோபப்படுவது கிடையாது. அதே சமயம் இறந்து விட்டவர்களிடம் உதவி தேடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது தான் மக்கள் கொந்தளிக்கின்றார்கள். திட்டுவதற்கு மட்டுமல்ல, வெட்டுவதற்கும் முன் வருகின்றார்கள். எனவே தீமையைத் தடுப்பது மிகப் பெரிய பணி. இதை தப்லீக் இயக்கத்தினர் புறக்கணித்து வருகின்றார்கள். இது இவர்களிடம் உள்ள அடிப்படையான தவறாகும்.

அடுத்து இவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் இவர்களுடைய வேதம்(?). அது தான் இவர்களால் பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் வாசிக்கப்படும் தஃலீம் தொகுப்பாகும். இதற்கு இவர்கள் திருக்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான் இவர்களது வேதம் என்று நாம் சொல்ல வேண்டியுள்ளது.
இவர்கள் தொழுத பிறகு தஃலீம் புத்தகத்தை வாசிக்கும் போது, “இதற்குப் பதிலாக அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதல் அடங்கிய ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பைப் படியுங்கள்” என்று சொன்னால் போதும். இவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். முகம் அனல் பிழம்பாகி விடும். குர்ஆன், ஹதீஸ் எல்லாம் பாமர மக்களுக்கு விளங்காது என்று உருப்படாத பதிலை உதிர்ப்பார்கள். ஜக்கரியா மவ்லானா போன்றவர்கள் எழுதிய தஃலீம் தொகுப்பு எளிதாக மக்களுக்கு விளங்குமாம். ஆனால் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் விளங்காதாம்.
இதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் குர்ஆனின் பொழி பெயர்ப்பை வாசித்து விட்டால், இனிமேல் பள்ளிவாசலில் யாரும் குர்ஆன் பொழி பெயர்ப்பை வாசிக்கக் கூடாது என்று தடை விதிப்பார்கள். இந்தக் கொடூர நிகழ்ச்சி சமீபத்தில் ஓர் ஊரில் நடந்தேறியது.

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். (அல் குர்ஆன் 74-49,50,51)
என்று அல்லாஹ் கூறுவது போல் இவர்களது நடைமுறை அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குர்ஆனை வாசிக்கக் கூடாது என்று சொன்னால் உடனே நாம் கொந்தளிப்போம். அதே சமயம் இந்தக் கருத்தை சமுதாயத்தில் உள்ள தப்லீக் காரர்கள் சொன்னால் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோம். இது என்ன நியாயம்?

இது தப்லீக் காரர்களின் அடிப்படையான மாபெரும் இரண்டாவது தவறாகும். புரிந்து கொள்வதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறியுள்ளோம். இன்னும் இது போன்று தவறுகள் பல அவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. இவர்கள் வேதமெனக் கொண்டாடும் தஃலீம் புத்தகத்தில் மலிந்து கிடக்கும் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பட்டியல் போடுவதென்றால் இந்த இதழ் தாங்காது. எனவே இந்த தப்லீக் இயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற நாம் பெரும்பாடு பட்டாக வேண்டும்.

இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விட, நபிகளாரின் பொன்மொழிகளை விட தஃலீம் புத்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், ‘ஃபழாயில் அஃமால்’ போன்ற நூல்களைப் பெருமளவில் அச்சிட்டு வெளியிடும் மிகப் பெரிய நிறுவனமான ‘இதாரா இன்ஷாஅத் இ தீனிய்யா’ என்ற பதிப்பகத்தின் உரிமையாளர் முஹம்மது அனஸ் என்பார் தப்லீக் இயக்கத்திலிருந்து தவ்பா செய்து தவ்ஹீதை, குர்ஆன் ஹதீஸை மட்டும் தமது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டுள்ளார். இனி இது போன்ற தஃலீம் தொகுப்புகளை அச்சிடுவதில்லை என்றும் அவற்றை விற்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளார்.

இது போல் பல சகோதரர்களும் தவ்பா செய்து உண்மையான தவ்ஹீதுடைய பாதைக்கு வர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக. குர்ஆன், ஹதீஸைத் தனது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஏகத்துவத்தில் வெளியிடப்படுகின்றது. அதைப் பார்த்து, பலருக்கும் படிக்கக் கொடுத்து பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஷிர்க்கான கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் விற்பதை நிறுத்தி விட்டேன்

முஹம்மது அனஸ் அவர்களின் பேட்டி

தப்லீக் ஜமாஅத்திலிருந்து தவ்பா செய்த முஹம்மது அனஸ் அவர்களிடம் பேட்டி கண்ட போது அவர் தெரிவித்ததாவது-

மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஹனஃபி ஃபிக்ஹ் நூல்களை நான் நாடினேன். இவ்வாறு நாடுவதற்குக் காரணம், ஹனஃபி நூல்கள் தான் எங்களுக்கு மார்க்கச் சட்ட நூல்கள் என்று தெரிவிக்கப்பட்டு, அந்தச் சூழலிலேயே நாங்கள் வளர்ந்திருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்காக அந்நூல்களில் தீர்வை நாடினால் ஏதாவது ஒரு ஆலிம் அல்லது ஒரு ஷைஹ் தனது கருத்தைத் தெரிவித்திருப்பாரே தவிர குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்தவொரு விடையையும் நான் காணவில்லை.

அதனால் குர்ஆன் ஹதீஸிலே நான் நேரடியாகப் பார்க்க முற்பட்ட போது, ஃபிக்ஹ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் தீர்வுகளுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டைக் கண்டேன். இப்போது குர்ஆன் ஹதீஸில் முழுமையாக நான் களம் இறங்கி விட்டேன். இதனால் இப்போது என்னைச் சுற்றி இருப்பவர்களால், குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்களின் சிந்தனையில் வார்க்கப்பட்டவர்களால், நான் ஒரு மாபெரும் பாவத்தைச் செய்தவன் போல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் படுகின்றேன்.

நாம் குர்ஆன் ஹதீஸிலிருந்து விஷயங்களைத் தெரிந்தவுடன் அதைப் பின்பற்ற ஆரம்பித்தது தான் அவர்களுடைய பார்வையில் நான் செய்த மிகப் பெரும் தவறாகும். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் தங்களது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். என்னுடைய மகனுக்கு நான் நபிவழியில் திருமணம் நடத்தி வைத்த போது அதற்காக எந்தவித சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நடத்தவில்லை. என்னுடைய மகன் ஊர்வலமாக மணமகன் கோலத்தில் அழைத்து வரப்படவுமில்லை. இது எனது உறவினர்களை மேலும் ஆத்திரமூட்டியது. ஒரு கார் மட்டும் ஏற்பாடு செய்து என்னுடைய மருமகளை அழைத்து வந்தேன். ஹிஜாப் சம்பந்தப்பட்ட சில சிடி-க்களைக் கேட்டு விட்டு என்னுடைய கண்களில் நீர் வழிந்தோடியது. இவ்வளவு நாள் நாம் ஏன் இது போன்ற ஒரு ஹிஜாபைப் பின்பற்றாமல் இருந்து விட்டோம்? என்று வருந்தி அன்றைய தினத்திலிருந்து மார்க்க அடிப்படையில் கணவனுடைய சகோதரனிடம் கூட ஹிஜாபைப் பேண ஆரம்பித்து விட்டோம்.

பேட்டியாளர் : குர்ஆன் ஹதீஸின் பக்கம் உங்களை ஈர்த்தது எது?

முஹம்மது அனஸ் : அஹ்லே ஹதீஸின் வலை தளமான www.ahlehadees.com-ம் ஷைஹ் அதாவுல்லாஹ் தர்வி, ஷைஹ் ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்புரி, ஷைஹ் மிஃராஜ் ரப்பானி, ஷைஹ் பதீவுத்தீன் ராஷிதி ஆகியோர் ஆற்றிய ஒலி நாடாக்களைக் கேட்டதும் தான் என்னை இந்தக் கருத்தின் பால் அழைத்து வந்தது. (அஷ்ரஃப் அலீ தானவி எழுதிய, தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களின் வெளியீடான) ‘அஃமாலே குர்ஆனி’ என்ற நூலில் உள்ள ஒரு செய்தியைப் பற்றி ஷைஹ் மிஃராஜ் ரப்பானி அவர்கள் ஆற்றிய ஓர் உரையைக் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்ட அந்தச் செய்தியை* அஃமாலே குர்ஆனி நூலில் பார்த்து விட்டு மிகவும் வெட்கப் பட்டேன். வேதனைப் பட்டேன். அந்த நூலை விற்கக் கூடாது என்று என்னுடைய பதிப்பக ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு விட்டேன். இது போன்று ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை விற்பதையும் நான் நிறுத்தி விட்டேன்.

அஃமாலே குர்ஆனி என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக முஹம்மது அனஸ் அவர்கள் குறிப்பிடும் செய்தி இது தான்.

“ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு காலத்தில் உதிரப் போக்கு அதிகமாக ஏற்படுமானால் சூரத்து ஆலஇம்ரானின் 114வது வசனத்தை மூன்று துண்டுத் தாள்களில் எழுதி ஒன்றை வலது தொடையிலும், மற்றொன்றை இடது தொடையிலும், இன்னொன்றை தொப்புளுக்குக் கீழும் கட்டித் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்”

பேட்டியாளர் : அஹ்லெ ஹதீசுக்கு வந்த பிறகு நீங்கள் ஏதேனும் சோதனைகளை எதிர்கொள்கின்றீர்களா?

முஹம்மது அனஸ் : நாம் பல்வேறு சிந்தனைகளை உடைய மக்களுடன் வாழ்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நான் குர்ஆன் ஹதீசுக்கு ஒத்தமைந்த நூல்களை என் புத்தக நிலையத்தில் வைக்க ஆரம்பித்தேன். தங்கள் சிந்தனைக்கு மாற்றமான நூல்கள் என்றோ அல்லது ஸலஃபீ நூற்கள் என்றோ தெரிந்தால் போதும், மக்கள் அதைச் சீண்டுவது கிடையாது. அல்லாமா பின் பாஸ் மையம் என்று டெல்லியில் உள்ளது. அங்கிருந்து நான் நூல்களைத் தருவித்தேன். ஆனால் அவற்றை யாரும் வாங்குவது கிடையாது. காரணம், அந்நூல்களின் ஆசிரியர் லுக்மான் ஸலஃபீ என்பதால் தான். அது தான் நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஆகும்.

பேட்டியாளர் : நீங்கள் மட்டும் தான் குர்ஆன் ஹதீஸ் படி நடக்க ஆரம்பித்துள்ளீர்களா? அல்லது உங்கள் குடும்பம் முழுவதுமா?

முஹம்மது அனஸ் : அல்ஹம்துலில்லாஹ். எனது மனைவி, குழந்தைகள் அனைவரும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலேயே தொழுகின்றனர். நாங்கள் ஏற்கனவே கைலானி என்பவர் எழுதிய தொழுகை நூலைப் படித்து முடித்திருக்கின்றோம். இது போல் புத்தகங்களைப் படிப்பதற்காக அன்றாடம் கால் மணி நேர அமர்வை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

பேட்டியாளர் : தங்களுடைய மகளார் (கணவர் வீட்டில்) பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக (மற்றொரு பேட்டியில்) தெரிவித்திருந்தீர்கள். உங்களுடைய மகளார் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையா? அல்லது வேறு பிரச்சனையா?

முஹம்மது அனஸ் : கைகளை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு என்ன விவகாரம் இருக்க முடியும்? விவகாரமே இது தான். தொழுகையில் இரு கைகளையும் உயர்த்துவது நபிவழி தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டியும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. கைகளை உயர்த்துவது தான் நபிவழி என்று மவ்லானா அப்துல் ஹை லக்னவி, இமாம் முஹம்மது ஆகியோர் தங்கள் நூல்களில் தெளிவாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். அவற்றை நான் போட்டோ காப்பி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வீண் பிடிவாதத்திலிருந்து விலகுவதாக இல்லை.

பேட்டியாளர் : ஷிர்க், பித்அத் போன்ற பாதைகளை விட்டு விட்டு வெளியே வந்து குர்ஆன் ஹதீஸ் என்ற நேரிய வழியைப் பின்பற்றும் உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மன திருப்தியுடன் உள்ளீர்களா?

முஹம்மது அனஸ் : நிச்சயமாக! நான் முழு திருப்தியுடன் உள்ளேன். எந்த அளவுக்கெனில், இப்போது நான் இறந்து விட்டால் கூட அல்லாஹ் தன் கருணையால் என்னை ஆரத் தழுவிக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றேன். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்காக எடுக்கும் எந்த ஒரு சிறு முயற்சியும் அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! பளிச்சிடும் பளிங்குக் கண்ணாடி போன்ற தூய்மையான மன நிறைவை நான் பெற்றிருக்கின்றேன்.

பேட்டியாளர் : உங்களுடைய வியாபாரமே புத்தகம் தான். உங்களது இந்த மாற்றம் உங்களது வியாபாரத் தொடர்புகளையும், வருமானத்தையும் பாதிக்கச் செய்திருக்கின்றதா?

முஹம்மது அனஸ் : நிச்சயமாக! ஃபழாயிலே ஸதகாத் (தர்மங்களின் சிறப்புகள்), ஃபழாயிலே ஹஜ் (ஹஜ்ஜின் சிறப்புகள்) என்ற தலைப்பில் உள்ள நூல்களை நான் உருது, ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளிலும் அச்சிட்டு விற்பனை செய்தேன். இவை பெருமளவு விற்பனையாயின. உருதுப் பதிப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்குள் 5000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது இவற்றை அச்சிடாதது என்னைப் பெருமளவு பாதித்துள்ளது. எனினும் அல்லாஹ் என்னைக் காப்பானாக! நான் பட்டினி கிடக்கும் ஒரு கட்டம் வந்தாலும் சரி தான். அந்த நிலையை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வேன். காரணம் ஒவ்வொருவரும் கண் மூடிய பின் அல்லாஹ்விடம் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

பேட்டியாளர் : நீங்கள் இது வரை விற்றுக் கொண்டிருந்த அமல்களின் சிறப்புகள் என்ற இந்த நூல்கள் (தர்மத்தின் சிறப்புகள், ஹஜ்ஜின் சிறப்புகள் ஆகியவை இந்நூலின் பாகங்கள் தான்) பல ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாங்கள் தெரிந்திருப்பீர்கள். “ஒரு பெரியார் மறைவான ஞானத்தை அறிகின்றார்”, “(நபி – ஸல் அவர்கள் இறந்த பின்னர்) வானத்தி-ருந்து இறங்கினார்கள்”, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை கப்ரி-ருந்து வெளியே வந்தது”, “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்ன போது அவர்கள் கூறிய பதிலை நாங்கள் செவியுற்றோம்” என்று தப்லீக் தலைவர்கள் கூறுகின்ற பிதற்றல்கள் இன்னும் இது போன்ற அப்பட்டமான ஷிர்க்கான கருத்துக்கள் இந்நூற்களில் பொதிந்து கிடக்கின்றன என்று தெரிந்த பிறகு இந்நூல்களைப் பல மொழிகளில் விற்கப் போகின்றீர்களா?
முஹம்மது அனஸ் : விற்கப் போவதில்லை. இந்தப் புத்தகங்களை விற்பனை செய்ததையே பாவம் என்று நினைக்கின்றேன். அதனால் வேறெதையும் விற்றாலும் விற்பேனே தவிர இது போன்றவற்றை ஒரு போதும் விற்க மாட்டேன். இந்தப் புத்தகங்கள் அனைத்திற்கும் நானே ஏகபோக உரிமையாளராக இருந்திருந்தால் அன்றே நான் கட-ல் தூக்கி எறிந்திருப்பேன். ஆனால் அதே சமயம் மிக மிக அதிகமான வழிகேடான கருத்துக்களைக் கொண்டுள்ள ஃபழாயிலே அஃமா-ன் இரண்டாம் பாகமான ஃபழாயில் ஸதகா மற்றும் ஹஜ் என்ற நூல்களை நாங்கள் நிறுத்தி விட்டோம். ஃபழாயில் அஃமால் (முதல் பாகத்தையும்) இப்போது இன்ஷா அல்லாஹ் நிறுத்தி விடுவோம்.

பேட்டியாளர் : எவ்வளவு காலமாக ஃபழாயில் அஃமாலை நீங்கள் அச்சிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்தப் பணியைத் துவக்கியது உங்கள் தந்தையார் தானே!

முஹம்மது அனஸ் : என்னுடைய தந்தையார் தான் இதை ஆப்செட்டில் முதன் முதலில் அச்சிட்டார். (இவர்கள் 50 ஆண்டு காலமாக இவற்றை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்) துவக்கத்தில் இவை ஹிக்காயத்-இ-ஸஹாபா, ஃபழாயில்-இ-நமாஸ் (தொழுகையின் சிறப்புகள்) என்று தனித்தனி நூல்களாக அச்சிடப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் ஒரே வால்யூமாக ஆக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானாவின் “தப்லீக் – இ – நிஸாப்’ என்று எனது தந்தையாரால் தான் இப்படி ஒரு பெயர் கொடுக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானா அவர்கள் இப்படியொரு பெயரைக் கொடுக்கவில்லை. தப்லீக் – இ – நிஸாப் என்று இவ்வாறு பெயர் கொடுத்ததற்கு பரேலவிகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததும் இதற்கு அமல்களின் சிறப்புகள் என்று பெயரிடப்பட்டது.

பேட்டியாளர் : இன்னும் இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகித்து, விற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இறுதியாக நீங்கள் என்ன அறிவுரை வழங்க விரும்புகின்றீர்கள்?

முஹம்மது அனஸ் : கொள்கையைப் பாழாக்கும் இத்ததைகய புத்தகங்களை விற்று பரப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஹலாலான ஒன்றல்ல! ஆதாரப்பூர்வமான புத்தகங்கள் நிறைய இருக்கும் போது, புறா சரித்திரங்கள், பச்சைக்கிளி சரித்திரங்களைக் கொண்ட புத்தகங்களை ஏன் விற்க வேண்டும்? (சூஃபிகள் சொன்ன பொய்யான கதைப் புத்தகங்களைக் குறிப்பிடுகின்றார்) இதுபோன்ற புத்தகங்களை விற்பதை விட்டு விட்டு ஆதாரப்பூர்வமான நூல்கள் விற்கப்பட வேண்டும்.

பேட்டியாளர் : உங்கள் இரு சகோதரர்கள் இந்த நபிவழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா?

முஹம்மது அனஸ் : ஆம்! நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் என்னுடைய இளைய சகோதரர் சி.டி.க்களைக் கேட்டு விட்டு தொழுகையில் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துகின்றார். “தொழுகையில் கைகளை உயர்த்துவது உண்மை என்றிருக்கும் போது நாம் ஏன் அதைப் பின்பற்றுவதற்குப் பயப்பட வேண்டும்? இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நிரூபிக்கப் பட்ட செயலும் நபிவழியும் அல்லவா? அதை நபி (ஸல்) அவர்கள் மரணமாகும் வரை கடைப்பிடித்திருக்கின்றார்கள் அல்லவா? எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த சத்திய நெறியில் இருந்த காரணத்தால் நான் தொழுகையில் கையை உயர்த்த ஆரம்பித்து விட்டேன்” என்று என்னிடம் என் சகோதரர் கூறினார்.

பேட்டியாளர் : சத்தியத்தைத் தேடும் பணியில் தப்லீக் ஜமாஅத்தினரையும் அரவணைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

முஹம்மது அனஸ் : குர்ஆன் ஹதீஸ் போதனையைத் தேடுவதும், தங்கள் செயல்கள் குர்ஆன் ஹதீசுக்கு இசைவாக உள்ளனவா? என்று சிந்தித்துப் பார்ப்பதும் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். இது தான் எல்லோருக்கும் தெரிவிக்கும் பொதுவான செய்தியாகும்.

பேட்டியாளர் : அஷ்ரப் அலீ தானவியின் “அஃமாலே குர்ஆன்’ போன்ற நூல்களைத் திரட்டி பரப்புகின்ற தேவ்பந்தி ஆலிம்களுக்கு எதையேனும் கூற விரும்புகின்றீர்களா?

முஹம்மது அனஸ் : ஆம்! மவ்லானா அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் அஃமாலே குர்ஆனின் ஆசிரியர் ஆவார். எனினும் யாரோ எழுதிய நூலை அஷ்ரப் அலீ தானவீ எழுதியதாக, பின்னால் சொல்லப் படுகின்றதா? அல்லது உண்மையில் அஷ்ரப் அலீ தானவீ அவர்களே இதை எழுதினார்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை. அல்லாஹ்வே உண்மையை அறிவான். ஆனால் நான் அந்த நூலில் கண்ட கருத்துக்கள் குர்ஆன் ஹதீசுக்கு நேர் முரணானவையாகும். அதனால் அவற்றை விற்பதை நிறுத்தி விட்டேன்.

பேட்டியாளர் : உறுதியாக முன்னால் இது யாரோ ஒருவரால் எழுதப்பட்டு பிந்திய காலத்தில் இது அஷ்ரப் அலீ தானவீயால் எழுதப்பட்டது என்று சொல்ல முடியாது. அப்படி அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் எழுதாததை அவர்கள் எழுதினார்கள் என்று தப்பாக சொல்லப்பட்டிருக்குமானால் அப்போதே தேவ்பந்தி உலமாக்கள் மறுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அஷ்ரப் அலீ தானவீ தான் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டல்லவா வருகின்றார்கள்? எனவே இது நிச்சயமாக அஷ்ரப் அலீ தானவீ எழுதியது தான் என்பது ஊர்ஜிதமாகின்றது.

முஹம்மது அனஸ் : ஜக்கரியா மவ்லானா எழுதிய “ஹிகாயத் அவ்லியா’ (வலிமார்கள் வரலாறு) என்ற நூலை நான் படித்த போது பெரிய அதிர்ச்சிக்குள்ளானேன். (பல்வேறு கப்ஸாக்களை உள்ளடக்கிய) இந்நூலுக்கு அஃபாஹே ஸலாஸா என்ற பெயர் வேறு உள்ளது. மொத்தத்தில் 60-70 வகையான புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன்

பேட்டியாளர் : ஜக்கரியா மவ்லானா எழுதிய ஜிஷ்தியா தரீக்கா வரலாற்றை படித்திருக்கின்றீர்களா?

முஹம்மது அனஸ் : நான் அந்த புத்தகத்திற்காக வந்த ஆர்டர்களையும் நிறுத்தி விட்டேன். அல்லாமல் இதுபோன்ற புத்தகங்களில் வரும் தவறான கருத்துக்களைத் தெளிவு படுத்துகின்ற (விமர்சன) நூல் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு யாரேனும் இம்மாதிரியான குறிப்புகளைத் தெரிவித்தால் நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தவறாக இருந்தால் அதை நீக்கி விடுவேன்.

பேட்டியாளர் : இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் தேவ்பந்தி உலமாக்கள் மற்றும் பரேலவிகள் ஆவர். அவர்களது கண்மூடித்தனமான பின்பற்றுதல் அவர்களை குர்ஆன் ஹதீஸ் பக்கம் திரும்புவதை விட்டும் தடுக்கின்றது. ஏன்? அவர்கள் சத்தியத்தைத் தெரிந்த பின்னரும் அதை மக்களிடம் எடுத்துரைக்க மறுக்கின்றார்கள். இவர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?

முஹம்மது அனஸ் : மார்க்கம் நமக்கு நபித்தோழர்கள் மூலம் வந்தது. யாரேனும் அவர்களது வாழ்க்கை வரலாறு நூல்களைத் தேடினால் அவை அவருக்குக் கிடைக்காது. ஆனால் நூறு வருடங்களுக்கு முன்னால் மரணித்த பீர்மார்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர்களின் முரீதுகள் எழுதித் தள்ளுகின்றனர். இன்றளவும் நாம் சஹாபாக்களைப் பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை.
(இதை அனஸ் அவர்கள் இங்கு குறிப்பிடக் காரணம், அஷ்ரப் அலீ தானவீக்குரிய வரலாறு நூல்கள் அதிகம் உள்ளன. அவை பத்து பாகங்களாக வெளிவந்துள்ளன.)

பேட்டியாளர் : ஒரு பெரிய நூல் வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

முஹம்மது அனஸ் : உங்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள். அவை குர்ஆன் ஹதீசுக்கு ஒத்து இருக்கின்றனவா? என்று பாருங்கள். தன்னிடத்தில் மக்கள் சொல்வதையெல்லாம் ஒருவர் பின்பற்றக் கூடாது. இது தான் முதன் முதலில் விடுக்கும் செய்தியாகும். இன்று நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை ஆதாரங்களைக் குறிப்பிடுவது கிடையாது. எனவே ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். தனது செயல்கள் சரியா? தவறா? என்று (குர்ஆன் ஹதீஸ் மூலம்) உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
(பேட்டி இத்துடன் நிறைவடைகின்றது)

Saturday, January 4, 2014

சிந்தனை செய் மனிதனே....!..!

 சிந்தனை செய் மனிதனே....!..!

ஒரு  வீட்டில் சுமார் 4 பேர். வீதியில் சுமா 100 வீடுகள். ஊரில் சும 50 வீதிகள். அந்த ஊருள்ள வட்டத்தில் சு 70 ஊர்கள். மாவட்டத்தில் சு 8 வட்டங்கள். மாநிலத்தில் சு 30 மாவட்டங்கள். நாட்டில் சு 25 மாநிலங்கள். கண்டத்தில் சு 20 நாடுகள். இந்த உலகத்தில் 7 கண்டங்கள். இந்த சூரிய குடும்பத்தில் 8 கிரகங்கள். சூரிய குடும்பம் உள்ள (பால்வீதி மண்டலம்) மில்கி-வே கேலக்ஸியில்  சுமார்ர்ர்ரர்ர்ர்… 10,000,00,00,000 சூரியன்கள்……. ஐ மீன்……. விண்மீன்கள் உள்ளனவாம்..!
.

இப்பிரபஞ்சத்திலும் சுமார்ர்ர்ரர்ர்ர்ர்… பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் உள்ளனவாம்..!! அப்புறம் இது போல இன்னும் “ஆறு பிரபஞ்சங்கள்” வேறு இருக்கின்றனவாம்..!!!
எனில், அந்த ஏழாவது பிரபஞ்சத்தின் தூரத்து கடைசி மூலையில் போய் நீங்கள் நின்று கொண்டு… ஹி…ஹி… அங்கிருந்தபடியே… பார்த்து சொல்லுங்கள் சகோ..! நான் உங்களுக்கு தெரிகிறேனா..? எனது அளவு என்ன..?
நான் உங்களை வந்தடையும் வழி……. என் அறை -வீடு -வீதி -ஊர் -வட்டம் -மாவட்டம் -மாநிலம் -நாடு -கண்டம் -உலகம் -சூரியகுடும்பம் -பால்வீதிமண்டலம் -அண்டம்(பிரபஞ்சம்) -பல்லண்டம்(ஏழு பிரபஞ்சம்)..!
Flashback……….Big Bang theory………..!
‘பிக் பேங் தியரி’ எனப்படும் இந்த பெரு வெடிப்புக்கோட்பாடானது 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 2 முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற்கொள்கை (Cosmological Principle).
‘பிக் பேங் தியரி’யின்படி, நாம் வாழும் இந்த பூமி உட்பட இவ்வண்ட வானவெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கி இணைந்திருக்கும் மிகச்சிறிய அளவினதான தீப்பிழம்பாகத்தான் இருந்திருக்கிறதாம். இத்தீப்பிழம்பானது இன்றுவரை ‘அறிவியலால் அறியப்படாத ஏதோ ஒரு சக்தியின் காரணத்தினால்’ மிக வேகமாக வெடித்து விரிவடையத்தொடங்கி விட்டதாம்..!
ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ்விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக்கூட்டங்களாக ‘உருவாகி இருக்கக்கூடும்’ எனவும் அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் நாம்  வாழும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாக ஆறிவியல் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராக பரவிக்காணப்படும் நுண்ணலைக்கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெருவெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப்படுகின்றது.
ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக்கோட்பாடு, என்னசொல்கிறது என்றால்… இவ்வண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்பானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் யாவும் ஏதோ இஷ்டத்துக்கு அள்ளித்தெளிக்கப் பட்டவையாக அல்லாமல் அண்ட வானவெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற்கொள்கை..!
.
ஆக, இப்படியான அண்டத்திலுள்ள பூமியில் ‘எப்படியோ’ நீர் இருந்ததால்தான், அதில் முதல் உயிரினம் ‘உருவானதாக’ சொல்கின்றனர், அறிவியலாளர்கள். காரணம், ஒவ்வோர் உயிரியின் உடல் கட்டுமானத்திற்கு மிகவும் செல்லுக்கு, அவசியமான ப்ரோட்டின் உருவாவதற்கு அடிப்படையான அமினோ ஆசிட் மூலக்கூறானது தண்ணீருக்குள்ளே தான் உருவானது என்றும் அது உருவாகவும் தண்ணீர்தான் அவசியம் என்றும் (Primordial soup theory) சொல்கின்றனர், அறிவியலாளர்கள். மாறுபட்ட வேறுசில தியரிகளும் உள்ளன. சுமார் 100 – 60  வருடங்களுக்கு முன்னர்தான் இந்த அறிவியல் கோட்பாடுகளின் முன்னேற்றம் எல்லாம்..! பெரும்பாலான அறிவியலாளர்களால் இக்கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. BigBang-ற்கு மாற்றமான “Big Bounce” தியரிக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை..!
.
பொதுவாக  நாம் நண்பர்களுடன் சிறுவயதில் பள்ளிக்கூட கணித புத்தகத்தில் ஏதேனும் ஒரு பயிற்சிக்கணக்கை பக்கம் பக்கமாக போட்டுவிட்டு அதன் ‘இறுதி விடை சரியா’ என்று பரிசோதிக்க புத்தகத்தின் கடைசி பக்கங்களை (விடைப்பக்கம்) திருப்பி அங்கே உள்ள கட்டக்கடைசி ஸ்டெப் விடையை பார்ப்பதுண்டு..! ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விடைகள் வரும் நிலையில், நம் விடை சரியாக இருந்தால் பெரும்மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா..!
பொதுவாக ஒரு ‘அறிவியல் கொள்கைக்கு’, ‘அறிவியல் நிரூபணம்’ இருந்தால் அது Fact என்று அழைக்கப்படுகின்றது. இல்லையெனில், அது theory என்றே அழைக்கபடும்..! இதுபோல பல தியரிகள் பல கோணங்களில் இருப்பதால் எது சரி என்று அறிவது..? இப்படியாக………..
நிரூபணம் இல்லாத -நிரூபிக்க முடியாத- நிரூபிப்பதற்கு  வழியற்ற அறிவியல் கோட்பாடு(theory)களை பொறுத்தமட்டில், அதை சரிகாணும் நோக்கில், குர்ஆன்தான் நமக்கு ஒரு விடைப்பக்கம்..! அது இறைவசனம் என்பதால்..!
இறைவன் சொல்வது என்ன…?  
குர்ஆன் – 51:47  இறைவசனத்தில்…
வானங்களும், (இங்கே பன்மையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ) பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா..? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா..?
தியரிகள் சரிதான்..! அடுத்து, அதென்ன… வானம் என்று இல்லாமல், ‘வானங்களும்’ என்று பன்மை..? அது அப்புறம் இருக்கட்டும். வேறு பல இடங்களில் குர்ஆன் குறிப்பிடும் ‘வானம்’  என்றால் முதலில் என்ன..? அது எதைக்குறிக்கிறது..?
பொருண்மை & ஆற்றல் (matter & energy) இவற்றால் இவ்வண்டம் நிரப்பப்பட்டுள்ளது என்கின்றனர் அறிவியலாளர்கள். இதனை நாமும் நம்மை சுற்றி உலகை பார்க்கும் போது அறிகிறோம்.
According to the law of conservation of mass & energy, mass and energy can neither be created nor be destroyed..! But one form can be converted into another..! ( நன்றி: mass law- 1785 லவோய்சியர், energy law-1842 ராபர்ட் மேயர் )
Generally law is a fact..! ஆனால், மனிதனால் உருவாக்க இயலாத, மாற்ற மட்டுமே முடிந்த, அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஆற்றலும்… அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் பொருண்மையும்… எங்கிருந்து ‘உருவாகி’ வந்தனவாம்..? எட்டாம் வகுப்பில் இருந்தே கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்..! அறிவியலில் இன்னும் விடை இல்லை இதற்கு..! ஆகச்சிறிய ஒரு ‘பொருள்’… big bang சமயத்தில் ‘ஆற்றல்’ வெளிப்படும்படி வெடித்தது..! ஆனால், அந்த ‘பொருள்’…அதற்கு முன்னர்..? அந்த ‘பொருள்’ எல்லாம் ‘ஆற்றலாக’ இருந்திருக்க வேண்டும்..! ‘ஆற்றல்’, இதுபோல ‘பொருளாக’ மாறுமா..? இது கேள்வி..!
.
பொருண்மை ஆற்றலாகவும், ஆற்றல்  பொருண்மையாகவும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மாறக்கூடியதே..! இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின், 1907-ம் ஆண்டின், E=mc² என்ற உலகப்புகழ்பெற்ற சமன்பாடு சொல்கிறது..! அதோடு இவ்வண்டத்தின் ஆற்றலும் பொருண்மையும் சமம் என்கிறது..!
.
ஆக, பெருவெடிப்புக்கு சற்று முன்னர் ஒரு பொருளாக அண்டம் இல்லை..! அதற்கு முந்திய தருணம் ஆற்றலாகத்தான் இருந்திருக்க வேண்டும்..! அது பொருளுமாகி ஆற்றலுமாகி விரிவடைந்து கொண்டே இருப்பதையும் அறிகிறோம். நாம் முன்னரே பார்த்த Big Bang நிகழ சாத்தியமான ‘ஏதோ ஒரு அறியப்படாத சக்தி’ எது..? எங்கிருந்து வந்தது..? ஆக, ‘அந்த சக்தி’ இலிருந்துதான் இந்த அண்டம் பொருளாகி ஆற்றலுடன் விரிவடைந்து கொண்டு இருக்கிறது..! இதை ‘Expanding Universe’ என்றும் அறிவியலாளர்களின் கோட்பாடுகள் சொல்கின்றன..!
.
power -[சக்தி ] is the rate at which energy [ஆற்றல்] is transferred..! ஆக… அந்த ‘முதல் ஆற்றல்’ யாருடையது சகோ..? Big Bang-ல் ஆற்றலை பொருளாக மாற்ற உபயோகிக்கப்பட்ட சக்தி யாருடையது சகோ..? விடை இதோ..!
குர்ஆன் – 51:47  இறைவசனத்தில்…
வானத்தை (இங்கே ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ) (நம்) சக்தியை கொண்டு அமைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்து வோராவோம்.
தியரி சரிதான்..! எல்லை தெரியாத இந்த ‘விரிவடையும் வானம்’ (விரிவடையும் அண்டம்) அதாவது Expanding Universe எப்படிப்பட்டது..? அதில் ஏகப்பட்ட விண்மீன் கேலக்ஸிகள் உள்ளன அல்லவா..? இந்த பிரபஞ்சத்தை விஞ்ஞானிகளில் ஒரு சாரார், கேலக்ஸி போல ‘தட்டை’ என்றும்… மற்றொரு சாரார் கோள்கள் /விண்மீன்கள் போல ‘கோளம்’ என்றும்… இன்னொரு சாரார் வித்தியாசமாக ‘நீள கோள மாத்திரை’ போன்றது என்றும்… விதவிதமாக படம் வரைந்து பலமாதிரி வாதங்களுடன் தியரி சொல்கின்றனர்..! எது சரி..?


குர்ஆன் – 37:6  இறைவசனத்தில்…
முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.
நட்சத்திரங்கள் என்றால்… அது விண்மீன்கள்  அல்லது  ‘விண்மீன்கள் அடங்கிய கேலக்ஸிகள்’..! அதெல்லாம் சரி… இது என்னது..? “முதல்” வானம்…? அதாவது… ‘முதல் பிரபஞ்சமா’..? அப்படி என்றால்… இது நாம் வாழும் “முதல் அண்டம்” எனில், நம் அண்டத்துக்கு வெளியே வேறு அண்டங்களும் உண்டா..?
‘ஆம்’… சில/பல ‘இருக்கலாம்’ என்கின்றன அறிவியலின்… சில தியரிகள். ஆனால்,  Multiverse Bubble Universes Theory… அதில் ‘ஏழு அண்டங்கள்’ அடுக்கடுக்காக உள்ளதாகவும் கூறி வண்ணப்படம் போட்டு விவரிக்கிறது, Multiverse… எனும் ‘பல்லண்டம்’ கோட்பாடு..!

இந்த தியரியில் இரண்டு… மூன்று… ஆறு.. என்றெல்லாம் இல்லாமல்… அதென்ன கணக்கு ‘ஏழு’..? பல கணக்கீடுகளுக்கு பிறகு இத்தியரி சொல்லப்பட்டாலும், ஆச்சர்யம்தான் எனக்கு..! இது சரியாக இருக்குமா..? எண்ணற்ற பல விண்மீன் கேலக்ஸிகள் உள்ள நாம் வாழும் இந்த  பிரபஞ்சத்தைத்தான் “முதல் வானம்” என்று நம் யுனிவர்ஸ் (அண்டம்) பற்றி கூறும் இறைவன், இது அல்லாமல் மேலும் “ஆறு வானங்கள்” சேர்த்து 7  அண்டங்கள் இருப்பதை பற்றி குர்ஆனில் (விடைப்பக்கம்..!) குறிப்பிடுவதை காணலாம்..!
ஆனால், மேலே உள்ள படம் ‘தலைகீழாக’(?) உள்ளது என்று எனக்கு தோன்றுகிறது..! ஏனெனில், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக மிஹ்ராஜ் பயணம் ஹதீஸ் இதை தெளிவாக சொல்கிறது. (புஹாரி-3207) இதன்படி, நமது அண்டம்தான் கீழே இருக்குமாறு அந்த தியரியில் வரையப்பட்டிருந்திருக்க வேண்டும்..!
குர்ஆன் 71:15 இறைவசனத்தில்….
ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காக படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா..?
ஆகவே, அடுக்கடுக்கடுக்காக அண்டங்களை அடுக்க கோள வடிவ பிரபஞ்ச கோட்பாட்டை  விட, ‘நீள்கோள மாத்திரை’ அல்லது ‘தட்டை’ பிரபஞ்ச தியரிகள் ஓகே போல தெரிகின்றன..! எது எப்படியோ…! நம் முதல் அண்டத்தின் பிரம்மானடமே அத்துனை பெரியது என்றால்…. மற்ற 7-அண்டங்கள்… பல்லண்டம் எத்துனை  பிரம்மாண்டம்..? சொற்ப அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட நமக்கு ஏழு பிரபஞ்ச பிரமாண்டம் என்பது ஒரு நல்ல படம் வரையக்கூட கற்பனைக்கு எட்டாத ஒன்று. சுபஹானல்லாஹ்..!
நமது அண்டத்திலேயே நமக்கு தெரியாத நாம் இன்னும் நாம் அறிய முடியாத ஆற்றல்களும் அறியமுடியாத பொருள்களும் உள்ளன. அதை எல்லாம் கருப்பு ஆற்றல் (Dark Energy) கரும்பொருள் (Dark Matter) என்கின்றனர். நமது பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமாக சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் இது..! அண்டத்தில் நமக்கு தெரிந்தது….. 4% தானாம்…?!?!?!?!
பெருவெடிப்புக்கொள்கையின் படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து பல்வேறு வேகத்தில் (900 km/s வேகம் முதல்… ஒளியின் வேகமான 3,00,000  km/s யையும் தாண்டி… நாம் அறிந்து அதிகபட்சமாக 5,40,000 km/s வேகம் வரை) விரிவடைந்து கொண்டே போகிறது. இப்படி, நம் அண்டத்தின் கேலக்ஸிகள் இவ்வளவு வேகமாக ஒன்றை ஒன்று விலகி ஓட காரணமான ஆற்றல் எது..? அதுதான் Dark Energy எனப்படும் ‘கரிய ஆற்றலாம்’..!
பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி பார்த்தால் நம் பிரபஞ்சத்தின் 74% கரிய ஆற்றலும் 22% கரும்பொருளும் உள்ளது..! அண்டவெளியில் உள்ள வஸ்துக்கள் போக மீதி உள்ளவை எல்லாம் வெற்றுவெளி என்ற எண்ணமும் காணாமல் போய் விட்டது. அதை கரும்பொருள், கரிய ஆற்றல் எல்லாம் ஆக்கிரமித்துள்ளன..! No empty space in the Universe. Dark Matter fills the intergalactic space… என்கிறது நவீன அறிவியல்..! வெட்ட வெளியான ( vacuum ) வானத்தை எப்படி ‘படைக்க முடியும்’ என்று இன்னும் கேட்டுக்கொண்டு இருப்போரை பார்த்தால்… எனக்கு பரிதாபமாக இருக்கிறது சகோ..!
குர்ஆன் 50:38 இறைவசனத்தில்….
வானங்களையும், (சகோ,கவனிக்கவும்… பன்மை) பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக்களைப்பும் ஏற்படவில்லை.
எனவே, அந்த கரும்பொருள்.. கரிய ஆற்றல் தியரிகள் எல்லாம் சதவேத அளவில் வேறுபடலாமே அன்றி சரியான அனுமானங்கள்தான்..!
“ஒளியின் திசைவேகத்தை விட அதிகமான திசைவேகத்தை எந்த ஒரு பொருளும் அடையவே முடியாது” என ஐன்ஸ்டீன் உறுதியாக நம்பினார்..! ஆனால், அதெல்லாம் ஹப்பிள் காலத்தில் பழைய அறிவியல் ஆகிவிட்டது..! கருப்புஆற்றல் – இது அதிகரிக்க அதிகரிக்க காலம் மற்றும் இடப்பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு… ‘ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கும் அதிகமான வேகத்தை எல்லாம் அடைய முடியும்’ என்பது பிந்தைய அறிவியல் உலகின் நம்பிக்கை..! வேகுதூரே விலகிச்செல்லும் ’5.82 quasar’ எனும் ஒரு கருந்துளையின் வேகம்… ஒளியை விட 1.8 மடங்கு அதிகம் என்று அளக்கப்பட்டுவிட,அந்த நம்பிக்கையை இது உறுதி செய்துவிட்டது..!
‘Flashfront’..(!?)………Big Crunch theory……..!
இப்படி விரிவடையும் பிரபஞ்சம்… இப்படியே விரிவடைந்து கொண்டே செல்லாதாம்..! எதிர்காலத்தில் ஒருநாள் சுருங்கிவிடுமாம்..! அதை “பெரும் அண்டக்குழைவு” (Big Crunch) என்கின்றனர் விஞ்ஞானிகள்..! நமது பேரண்டத்தின் கடைசி விதியாக பிரபஞ்சவியல் வல்லுநர்கள் முன்வைக்கும் எதிரெதிரான கருதுகோள்களுள் ஒன்று இது..!
(மற்றவை: “Big Freeze”=விரிவடையும் அண்டம் இறுதியில் உறைந்துவிடும், “Big Rip”=விரிவடையும் அண்டம்  இறுதியில் கிழிந்துவிடும்.)
Big Crunch-படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டு மொத்தமாய் சுருண்டு சுருங்கி ஒரு ‘கருந்துளை’யாகி விடும்..! (பார்க்க:- கருந்துளை பற்றி விரிவாக எனது முந்திய பதிவு )

இதற்கு வாய்ப்பு இருக்கிறதா..? ஆம்..! இருந்தால், எப்போது எப்படி அது நடக்கும்..? குர்ஆன் 21:104 இறைவசனத்தில்….
எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவது போல் வானத்தை (கவனியுங்கள் சகோ… ஒருமையில் உள்ளது… ஒரு அண்டம் அழிக்கப்படுவது பற்றி மட்டுமே இவ்வசனம் கூறுகிறது…) நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
இவ்வசனத்தில்,  ‘கியாமத் நாள்’ எனப்படும் இறுதிநாளில், ஓர் அண்டத்தின் இறுதியாக அண்டக்குழைவு கோட்பாட்டை சரிகான்கிறோம். ஆனால், நான் தேடியவரை ‘பல்லண்டத்துக்கு ஒரு குழைவு கோட்பாடு’  ஒன்றை இன்னும் யாரும் வகுக்கவில்லை போல..! ஆனால், நமது விடைப்பக்கமான குர்ஆன் அதையும் அட்வான்சாகவே அதே கியாமத்நாளில்… ‘பல்லண்டத்திற்கு என்ன ஏற்படும்’ என சொல்லிவிடுவதையும் காண்கிறோம்..!
குர்ஆன் 39:67 இறைவசனத்தின் இடையில்…..
……கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் (கவனியுங்கள் சகோ… பன்மையில் உள்ளது… பல்லண்டம் அழிக்கப்படுவது பற்றி இவ்வசனம் கூறுகிறது...) அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்……
—என்று தெளிவாக அல்லாஹ் அறிவித்து விடுவதை காண்கிறோம்..!
இதுவரை  நாம் ஃப்ளாஷ்ஃபேக்கில் ‘பார்த்த(!)’ Big Bang மற்றும் ஃப்ளாஷ்ஃப்ரண்ட்டில் ‘பார்க்க(!)இருக்கும்’ Big Crunch ஆகிய இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த ஏழு அண்டங்களிலும் இருப்பவை  எல்லாம் அதனதன் வரையரையில் செவ்வனே சரியான அச்சில் சுழன்றும், துல்லியமான ஈர்ப்பு விசையில் ஒன்றை ஒன்று சுற்றியும், சீரான வேகத்தில் அனைத்தும் ஓடிக்கொண்டும் இருக்கின்றனவே… எப்படி…? இதெல்லாம் யாருடைய கட்டுப்பாட்டில் சாத்தியப்படுகிறது..?

வேறொரு கேலக்ஸியில் இருந்து பூமிக்கு அருகே UFO -வில் வரும் ஒரு Alien  (வேற்றுக்கிரக வாசி) நமது பூமிக்கு மேலே பறந்து கொண்டு இருக்கிற அத்தனை சேட்டிலைட்டுகளையும் பார்த்துவிட்டு, “இவை தானாக உருவாகி தானாவே அந்த கிரகத்தை சுற்றி வரும் துணைக்கோள் தூசிக்கூட்டம் போல…” என்று நினைத்தால்… அது அறிவுடைமையா..? கஷ்டப்பட்டு அவற்றை எல்லாம் செய்து விண்ணுக்கு அனுப்பிய நாசா, இஸ்ரோ போன்ற உலகநாட்டு சேட்டிலைட் ஏவுதள விஞ்ஞானிகள் இப்புரிதலை சரியென சகித்துக் கொள்வார்களா ..? குர்ஆன் 35:41 இறைவசனத்தில்….
வானங்களும்,(கவனியுங்கள் சகோ… பன்மையில் உள்ளது) பூமியும் இடம் பெயராதபடி அ(இறை)வனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத்தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத்தன்மை உடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
ஆனால் இதனை நம்புவர்கள் எப்படிப்பட்டவர்களாம்..?
குர்ஆன் 32:15 இறைவசனத்தில்….
நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனை புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்..!
சுப்ஹான ரப்பியல் அஃலா…. ‘உயர்வான எனது இரட்சகன் தூய்மையானவன்’
References:
http://corpus.quran.com
http://www.tamilquran.in
http://www.searchtruth.com
http://www.islamawakened.com
http://en.wikipedia.org/wiki/Big_Bang
http://en.wikipedia.org/wiki/Dark_energy
http://www.messagetoeagle.com/darkmatt.php
http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe
http://www.wonderquest.com/ExpandingUniverse.htm
http://en.wikipedia.org/wiki/Multiverse#Bubble_theory
http://www.sunniforum.com/forum/archive/index.php/t-14343.html
http://www.chemteam.info/Thermochem/Law-Cons-Mass-Energy.html
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://news.nationalgeographic.com/news/2005/11/1102_051102_black_hole.html

நன்றி : http://chittarkottai.com/

Thursday, July 4, 2013

மார்க்க வியாபாரிகளே - திருந்திக்கொள்ளுங்கள்

மார்க்க வியாபாரிகளே - திருந்திக்கொள்ளுங்கள்

ithawheed.blogspot.com
9:9
அவர்கள்   அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்)   வழியிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை   மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9)

9:34
நம்பிக்கைக் கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரியிலும்,துறவிகளிலும்…   அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின்   பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும்,   வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில்   செலவிடாதிருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!)   நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 9:34)
3:187

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க   வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு   நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப்   பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக்   கொண்டார்கள் – அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.   (அல்குர்ஆன் 3:187)

5:63
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள்   உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க   வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.   (அல்குர்ஆன் 5:63)
  அல்லாஹ் இறக்கியருளிய நேர்வழியை மிகமிக   சொற்பமானவர்களே விளங்குவார்கள்;  மிகமிகக் குறைந்தவர்களே விளங்குவார்கள்   என்று அல்குர்ஆனில் ஆணித்தரமாக அல்லாஹ் அறிவிக்கிறான்.

7:3
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்;   அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்;   நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.    (அல்குர்ஆன் 7:3)
இந்த மிகமிக சொற்பமான சுவர்க்கம் செல்லும் மக்கள் அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான   ஹதீஸ்களையும் நேரடியாக விளங்கி அதன்படி நடக்கிறார்கள். இவர்களே அல்லாஹ்வின்   நன்மாராயம் பெற்றவர்கள், பாக்கியசாலிகள், அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று   சுவர்க்கம் செல்கிறவர்கள்.
இதற்கு மாறாக மக்களில் மிகமிகப் பெருங்கொண்ட கூட்டம் அல்குர்ஆனையும்,   ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் விளங்கக் கூடியவர்களாக இல்லை. நரகத்தை நிரப்புவதற்காகவே   செயல்படுகிறவர்கள். இதையும் அல்குர்ஆன் அதிகமான இடங்களில் சுட்டிக்காட்டுகிறது.   அவை வருமாறு:

17:89
“நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகத்   தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் (இதை)   நிராகரிக்காதிருக்கவில்லை. (17:89)

25:30
“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து   ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)
குறிப்பாக இந்த இறைவாக்குகளை மீண்டும், மீண்டும் படித்து உள்வாங்கி ஆழ்ந்து   சிந்தியுங்கள். அல்குர்ஆன் மனிதர்களில் ஆண், பெண் அனைவரும் விளங்கும் நிலையில்   இறக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அரபி மொழி படித்த  மட்டுமே விளங்க   முடியும் என வாதிப்போர் ஷைத்தானின் தோழர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிய   முடியும்.
அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் செல்லும் மக்கள் மிகமிகக் குறைவு.   அவர்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கி அதன்படி நடப்பார்கள். மார்க்கத்தைப்   பிழைப்பாகக் கொண்டவர்களின் வலையில் சிக்க மாட்டார்கள்!  மார்க்கத்தைப்   பிழைப்பாகக் கொண்டவர்கள் அல்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் உள்ளதை   உள்ளபடி எடுத்துச் சொல்ல முன் வரமாட்டார்கள்.
அதனால்தான் மார்க்கத்தைப் பிழைப்பாக்கி, தொண்டை தொழிலாக்கி வயிற்றை நிரப்ப    குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி சொல்லாமல், கோணல் வழிகளான  கற்பனைகளை   மக்களுக்குப் போதிக்கின்றனர்.

11:18
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்?   அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்; இவர்கள் தாம்   தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்;   இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். (11:18)
எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒரு போதும்   நேர்வழியை – குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது. அனைத்து   நபிமார்களையும் மக்களிடம் கூலியை எதிர்பார்த்துச் செயல்படாமல், சொந்த உழைப்பைக்   கொண்டு வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லாஹ்   கட்டளையிட்டிருப்பதின் இரகசியம் இதுதான்.

36:21
“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே   நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).    அல்குர்ஆன் யாஸீன் (36:21)
  இறைவாக்கு இதையே மிகமிக உறுதியாக கூறுகிறது.   மக்களிடம் கூலியை – சம்பளத்தை எதிர்பார்க்காமல், அல்லாஹ்வுக்காக மட்டுமே மார்க்கப்   பணி செய்கிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்க முடியும். அதற்கு மாறாக   சம்பளத்திற்காக மார்க்கப்பணி புரிகிறவர்கள் ஒரு போதும் நேர்வழியைப் போதிக்க   மாட்டார்கள். காரணம் நேர்வழி செல்லும் சொற்பமான மக்களைக் கொண்டு அவர்களின்   நோக்கம் நிறைவேறாது. சம்பளத்திற்காக நரகம்செல்லும் அதிகமான மக்களைக் கவர்வதாக   இருந்தால், அவர்கள் விரும்பும் கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதிக்கும் கட்டாயம்   ஏற்படுகிறது.
புரோகிதரர்கள் வழிகேடுகளையே நேர்வழியாக – மார்க்கமாகப் போதிக்கும் காரணம்   இப்போது சுய சிந்தனையாளர்களுக்கு,  நிச்சயமாக புரிந்திருக்கும்.   முஸ்லிம்கள்   அல்குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் நேரடியாகப் படித்து விளங்கிச் செயல்பட்டால் மட்டுமே   ஈடேற்றம் பெற முடியும். அல்லாஹ் அருள் புரிவானாக!

Ori Source : http://www.readislam.net/portal/archives/5648

Sunday, April 28, 2013

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்


இஸ்லாம்

அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்:
எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்: அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம். மேலும் (சுவனத்தில்) உங்கள் மன ம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம்; உங்களுக்குக் கிடைக்கும். இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும்! (41:30-32)
திண்ணமாக எவர்கள் அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இத்தகையவர்களே சுவனம் செல்பவர்களாவர். உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் பலனாக அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள். (46:13,14)
இந்த வசனங்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற வசனங்களிலிருந்தும் மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதனால் ஏற்படும் சில நன்மைகளை நாம் பெறமுடிகின்றது. அவை வருமாறு:
1-அல்லாஹ்வுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு ஏற்படுவதோடு உள்ளத்திற்கு அமைதியும் மனதிற்கு நிம்மதியும் ஏற்படுகின்றது. எவ்வாறென்றால் உறுதியாக இருப்பவன் அல்லாஹ்வின் கடமைகளை அறிந்து அதன் பிரகாரம் அவன் திருப்திகொள்ளும் விதத்தில் அவன் நடந்து கொள்கின்றான்.
2- எவர்கள் அல்லாஹ் எங்கள் இறை வன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலை த்து நிற்கின்றார்களோ… அதாவது எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் சொல்லாலும் செயலாலும் தூய்மையாக நடந்தார்களோ…என்று அல்லாஹ் அவர்களைப் புகழ்கின்றான்.
3-மரண நேரத்தில் இத்தகையவர்கள்மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்கள் தம் கப்ருகளிலிருந்து வெளிவரும்போது மறுமைக்காக நீங்கள் செய்தவற்றுக்காகவும் உலகத்தில் நீங்கள் விட்டுவந்த சொத்து சுகம் மற்றும் பிள்ளைகள்; குடும்பத்தார்களுக்காகவும் நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என்று அவ்வானவர்க ள் நற்செய்தி கூறுவார்களாம்.
4-அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் அவர்களுக்கு உண்டு என்ற வானவர்களின் நற்செய்தி கிடைக்கும். ”உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்” என்று அவ்வானவர்கள் கூறுவார்கள்.40:30
5-இவ்வுலகிலும் மறுவுலகிலும் வானவர்களின் துணை கிடைக்கும். இவ்வுலகில் அவர்கள் பாவங்களிலும் தவறுகளிலும் விழுந்து விடாதவாறு வானவர்கள் பாதுகாப்பார்கள். மேலும் அவர்களை நெறிப்படுத்துவார்கள். மறுமையில் அவர்கள் கப்ரிலிருந்து வெளிவரும்போது சுவனம் செல்லும் வரை அவர்களை அவ்வானவர்கள் வரவேற்பார்கள். ”இந்த உலக வாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்”. (அல் குர்ஆன்)
6-உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அருளால் சுவனத்தில் அவர்களுடைய உள்ளங்கள் எதை விரும்புகின்றனவோ அவர்களுடைய கண்களுக்கு எது குளிர்ச்சியாக இருக்கின்றதோ அவர்களுடைய நாவுகள் எதைக் கேட்கின்றனவோ அவை அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். ”உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கின்றது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்”". (அல்குர்ஆன்)
7-இந்த உறுதிப்பாடு அல்லாஹ்வுக்குப் பிறகு அவர்களைப் பாவங்களிலும் மோசமான காரியங்களிலும் விழுந்துவிடாமல் பாதுகாப்பதோடு மோசமான மக்களுடன் கூட்டுச் சேர்வதைவிட்டும் வணக்க வழிபாட்டில் சோம்பல் காட்டுவதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும்.
தற்போது இஸ்லாமிய சமுதாயம் மார்க்கத்தில் பலவகையான சந்தேகங்களும் அவரவர் தம் மனோச்சையின்படி நடந்துகொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கின்றது. இதன் காரணமாக மார்க்கம் நூதனமாக ஆகிவிட்ட தோடு அதைப் பின்பற்றக்கூடியவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல ஒரு நூதனமான உதாரணத்தைப் போலாகிவிட்டனர்.
அதாவது மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர் நெருப்பைப் பற்றிப்பிடிப்பவரைப் போல்ஆகி விடுவார்.(நபிமொழி)
கடந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விட இன்றைய முஸ்லிம்களுக்குத்தான் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள் அதிகம் தேவைப்படுகின்றன . இவ்வுறுதியைப் பெறுவதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. காரணம் காலம் கெட்டுக்கிடக்கின்றது. உண்மையான சகோதரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். உத வக்கூடியவர்கள் பலவீனமாகவும் ஒத்துழைக்கக்கூடியவர்கள்

Wednesday, March 20, 2013

மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்

 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
ithawheed.blogspot.com 

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.
“குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.
“இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82)
என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.
டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:
“இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்குஇணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறித்த மூலத்தில் ‘அல்ஃபதக்’ எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். {ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!}
நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.
“இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211) என்று கூறும் குர்ஆன்,
“(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’ (18:98) என்ற கடடளையிடுகின்றது.
ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிருக்கலாம்.
ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப் பெற்றது

Monday, October 15, 2012

சகோதரர் P.ஜைனுல் ஆபிதீனுக்காக பிரார்த்திப்பீர்களாக.... இன்ஷா அல்லாஹ்...


ithawheed.blogspot.com

ண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ விழிப்புணர்வுப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள், "PJ" என்று அன்புடன் அழைக்கப்படும் சகோ. P. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலையானவர். இஸ்லாமியப் பேரவை, அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ், ஜம்யிய்த்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா, அனைத்துத் தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய சன்மார்க்க-சமுதாய அமைப்புகளில் பெரும் பங்காற்றியவர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர். நாவன்மை மிக்க பிரச்சாரகர். அரபு மொழியில் தேர்ந்தவர். மறை விளக்கம், வரலாறு, ஹதீஸ் கலை, ஃபிக்ஹுச் சட்டம் ஆகியவற்றில் ஆய்வுரை வழங்கத்தக்க நம் சமகாலத் தமிழறிஞர்; பன்னூலாசிரியர். அந்நஜாத், அல்ஜன்னத் ஆகிய மாத இதழ்களில் ஆசிரியராக இருந்தபோது, இவர் எழுதிய தலையங்கங்கள் மாற்றுக் கருத்துடையோராலும் விரும்பிப் படிக்கப்பட்டவை.

பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை, அதன் தூய வடிவில் அறிமுகப்படுத்துவதற்காகத் தமிழகமெங்கும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' எனும் உயிரோட்டமான பிரச்சாரம் மேற்கொண்டவர். எல்லாருக்கும் விளங்கும் எளிமையான பேச்சுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர்.
சகோதரர் PJ அவர்களது அரபு மொழி அறிவு ஆய்வுத்திறன், எழுத்தாற்றல், சொல்லாற்றல், ஷிர்க் மற்றும் பித்-அத்துக்கு எதிரான  முப்பதாண்டுப் போராட்டம், வரதட்சணை எனும் கொடிய நோய்க்கு எதிராக முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு, மக்களிடம் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், பிற சமயத்தாருக்கு இஸ்லாமை எளிமையாக அறிமுகப்படுத்தியமை போன்ற அவரது சேவைகள் உலகெங்கும் வாழும் தமிழறிந்த முஸ்லிம்களுக்குத் தேவை.

அன்னாருக்கு மார்பின் வலப்புறத்தில் தோலுக்கடியில் சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டு, அது கேன்ஸர் வகைக் கட்டி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் சிகிச்சையும் தொடங்கப்படவுள்ளது. "பிரார்த்தனையைவிட சக்திமிக்க மருந்தில்லை" என்று உறுதியுடன் நம்புகின்ற நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் "சகோ. PJ அவர்களுடைய நோயை முற்றிலும் நீக்கி, நிறைவான உடல்நலத்தை அவருக்கு வழங்க வேண்டும்" என உளமாரப் பிரார்த்தனைகள் செய்ய வேண்டுமாய் அன்புடன் கோருகிறோம்.

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...