3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Saturday, January 4, 2014

சிந்தனை செய் மனிதனே....!..!

 சிந்தனை செய் மனிதனே....!..!

ஒரு  வீட்டில் சுமார் 4 பேர். வீதியில் சுமா 100 வீடுகள். ஊரில் சும 50 வீதிகள். அந்த ஊருள்ள வட்டத்தில் சு 70 ஊர்கள். மாவட்டத்தில் சு 8 வட்டங்கள். மாநிலத்தில் சு 30 மாவட்டங்கள். நாட்டில் சு 25 மாநிலங்கள். கண்டத்தில் சு 20 நாடுகள். இந்த உலகத்தில் 7 கண்டங்கள். இந்த சூரிய குடும்பத்தில் 8 கிரகங்கள். சூரிய குடும்பம் உள்ள (பால்வீதி மண்டலம்) மில்கி-வே கேலக்ஸியில்  சுமார்ர்ர்ரர்ர்ர்… 10,000,00,00,000 சூரியன்கள்……. ஐ மீன்……. விண்மீன்கள் உள்ளனவாம்..!
.

இப்பிரபஞ்சத்திலும் சுமார்ர்ர்ரர்ர்ர்ர்… பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் உள்ளனவாம்..!! அப்புறம் இது போல இன்னும் “ஆறு பிரபஞ்சங்கள்” வேறு இருக்கின்றனவாம்..!!!
எனில், அந்த ஏழாவது பிரபஞ்சத்தின் தூரத்து கடைசி மூலையில் போய் நீங்கள் நின்று கொண்டு… ஹி…ஹி… அங்கிருந்தபடியே… பார்த்து சொல்லுங்கள் சகோ..! நான் உங்களுக்கு தெரிகிறேனா..? எனது அளவு என்ன..?
நான் உங்களை வந்தடையும் வழி……. என் அறை -வீடு -வீதி -ஊர் -வட்டம் -மாவட்டம் -மாநிலம் -நாடு -கண்டம் -உலகம் -சூரியகுடும்பம் -பால்வீதிமண்டலம் -அண்டம்(பிரபஞ்சம்) -பல்லண்டம்(ஏழு பிரபஞ்சம்)..!
Flashback……….Big Bang theory………..!
‘பிக் பேங் தியரி’ எனப்படும் இந்த பெரு வெடிப்புக்கோட்பாடானது 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 2 முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற்கொள்கை (Cosmological Principle).
‘பிக் பேங் தியரி’யின்படி, நாம் வாழும் இந்த பூமி உட்பட இவ்வண்ட வானவெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கி இணைந்திருக்கும் மிகச்சிறிய அளவினதான தீப்பிழம்பாகத்தான் இருந்திருக்கிறதாம். இத்தீப்பிழம்பானது இன்றுவரை ‘அறிவியலால் அறியப்படாத ஏதோ ஒரு சக்தியின் காரணத்தினால்’ மிக வேகமாக வெடித்து விரிவடையத்தொடங்கி விட்டதாம்..!
ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ்விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக்கூட்டங்களாக ‘உருவாகி இருக்கக்கூடும்’ எனவும் அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் நாம்  வாழும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாக ஆறிவியல் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராக பரவிக்காணப்படும் நுண்ணலைக்கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெருவெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப்படுகின்றது.
ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக்கோட்பாடு, என்னசொல்கிறது என்றால்… இவ்வண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்பானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் யாவும் ஏதோ இஷ்டத்துக்கு அள்ளித்தெளிக்கப் பட்டவையாக அல்லாமல் அண்ட வானவெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற்கொள்கை..!
.
ஆக, இப்படியான அண்டத்திலுள்ள பூமியில் ‘எப்படியோ’ நீர் இருந்ததால்தான், அதில் முதல் உயிரினம் ‘உருவானதாக’ சொல்கின்றனர், அறிவியலாளர்கள். காரணம், ஒவ்வோர் உயிரியின் உடல் கட்டுமானத்திற்கு மிகவும் செல்லுக்கு, அவசியமான ப்ரோட்டின் உருவாவதற்கு அடிப்படையான அமினோ ஆசிட் மூலக்கூறானது தண்ணீருக்குள்ளே தான் உருவானது என்றும் அது உருவாகவும் தண்ணீர்தான் அவசியம் என்றும் (Primordial soup theory) சொல்கின்றனர், அறிவியலாளர்கள். மாறுபட்ட வேறுசில தியரிகளும் உள்ளன. சுமார் 100 – 60  வருடங்களுக்கு முன்னர்தான் இந்த அறிவியல் கோட்பாடுகளின் முன்னேற்றம் எல்லாம்..! பெரும்பாலான அறிவியலாளர்களால் இக்கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. BigBang-ற்கு மாற்றமான “Big Bounce” தியரிக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை..!
.
பொதுவாக  நாம் நண்பர்களுடன் சிறுவயதில் பள்ளிக்கூட கணித புத்தகத்தில் ஏதேனும் ஒரு பயிற்சிக்கணக்கை பக்கம் பக்கமாக போட்டுவிட்டு அதன் ‘இறுதி விடை சரியா’ என்று பரிசோதிக்க புத்தகத்தின் கடைசி பக்கங்களை (விடைப்பக்கம்) திருப்பி அங்கே உள்ள கட்டக்கடைசி ஸ்டெப் விடையை பார்ப்பதுண்டு..! ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விடைகள் வரும் நிலையில், நம் விடை சரியாக இருந்தால் பெரும்மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா..!
பொதுவாக ஒரு ‘அறிவியல் கொள்கைக்கு’, ‘அறிவியல் நிரூபணம்’ இருந்தால் அது Fact என்று அழைக்கப்படுகின்றது. இல்லையெனில், அது theory என்றே அழைக்கபடும்..! இதுபோல பல தியரிகள் பல கோணங்களில் இருப்பதால் எது சரி என்று அறிவது..? இப்படியாக………..
நிரூபணம் இல்லாத -நிரூபிக்க முடியாத- நிரூபிப்பதற்கு  வழியற்ற அறிவியல் கோட்பாடு(theory)களை பொறுத்தமட்டில், அதை சரிகாணும் நோக்கில், குர்ஆன்தான் நமக்கு ஒரு விடைப்பக்கம்..! அது இறைவசனம் என்பதால்..!
இறைவன் சொல்வது என்ன…?  
குர்ஆன் – 51:47  இறைவசனத்தில்…
வானங்களும், (இங்கே பன்மையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ) பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா..? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா..?
தியரிகள் சரிதான்..! அடுத்து, அதென்ன… வானம் என்று இல்லாமல், ‘வானங்களும்’ என்று பன்மை..? அது அப்புறம் இருக்கட்டும். வேறு பல இடங்களில் குர்ஆன் குறிப்பிடும் ‘வானம்’  என்றால் முதலில் என்ன..? அது எதைக்குறிக்கிறது..?
பொருண்மை & ஆற்றல் (matter & energy) இவற்றால் இவ்வண்டம் நிரப்பப்பட்டுள்ளது என்கின்றனர் அறிவியலாளர்கள். இதனை நாமும் நம்மை சுற்றி உலகை பார்க்கும் போது அறிகிறோம்.
According to the law of conservation of mass & energy, mass and energy can neither be created nor be destroyed..! But one form can be converted into another..! ( நன்றி: mass law- 1785 லவோய்சியர், energy law-1842 ராபர்ட் மேயர் )
Generally law is a fact..! ஆனால், மனிதனால் உருவாக்க இயலாத, மாற்ற மட்டுமே முடிந்த, அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஆற்றலும்… அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் பொருண்மையும்… எங்கிருந்து ‘உருவாகி’ வந்தனவாம்..? எட்டாம் வகுப்பில் இருந்தே கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்..! அறிவியலில் இன்னும் விடை இல்லை இதற்கு..! ஆகச்சிறிய ஒரு ‘பொருள்’… big bang சமயத்தில் ‘ஆற்றல்’ வெளிப்படும்படி வெடித்தது..! ஆனால், அந்த ‘பொருள்’…அதற்கு முன்னர்..? அந்த ‘பொருள்’ எல்லாம் ‘ஆற்றலாக’ இருந்திருக்க வேண்டும்..! ‘ஆற்றல்’, இதுபோல ‘பொருளாக’ மாறுமா..? இது கேள்வி..!
.
பொருண்மை ஆற்றலாகவும், ஆற்றல்  பொருண்மையாகவும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மாறக்கூடியதே..! இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின், 1907-ம் ஆண்டின், E=mc² என்ற உலகப்புகழ்பெற்ற சமன்பாடு சொல்கிறது..! அதோடு இவ்வண்டத்தின் ஆற்றலும் பொருண்மையும் சமம் என்கிறது..!
.
ஆக, பெருவெடிப்புக்கு சற்று முன்னர் ஒரு பொருளாக அண்டம் இல்லை..! அதற்கு முந்திய தருணம் ஆற்றலாகத்தான் இருந்திருக்க வேண்டும்..! அது பொருளுமாகி ஆற்றலுமாகி விரிவடைந்து கொண்டே இருப்பதையும் அறிகிறோம். நாம் முன்னரே பார்த்த Big Bang நிகழ சாத்தியமான ‘ஏதோ ஒரு அறியப்படாத சக்தி’ எது..? எங்கிருந்து வந்தது..? ஆக, ‘அந்த சக்தி’ இலிருந்துதான் இந்த அண்டம் பொருளாகி ஆற்றலுடன் விரிவடைந்து கொண்டு இருக்கிறது..! இதை ‘Expanding Universe’ என்றும் அறிவியலாளர்களின் கோட்பாடுகள் சொல்கின்றன..!
.
power -[சக்தி ] is the rate at which energy [ஆற்றல்] is transferred..! ஆக… அந்த ‘முதல் ஆற்றல்’ யாருடையது சகோ..? Big Bang-ல் ஆற்றலை பொருளாக மாற்ற உபயோகிக்கப்பட்ட சக்தி யாருடையது சகோ..? விடை இதோ..!
குர்ஆன் – 51:47  இறைவசனத்தில்…
வானத்தை (இங்கே ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ) (நம்) சக்தியை கொண்டு அமைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்து வோராவோம்.
தியரி சரிதான்..! எல்லை தெரியாத இந்த ‘விரிவடையும் வானம்’ (விரிவடையும் அண்டம்) அதாவது Expanding Universe எப்படிப்பட்டது..? அதில் ஏகப்பட்ட விண்மீன் கேலக்ஸிகள் உள்ளன அல்லவா..? இந்த பிரபஞ்சத்தை விஞ்ஞானிகளில் ஒரு சாரார், கேலக்ஸி போல ‘தட்டை’ என்றும்… மற்றொரு சாரார் கோள்கள் /விண்மீன்கள் போல ‘கோளம்’ என்றும்… இன்னொரு சாரார் வித்தியாசமாக ‘நீள கோள மாத்திரை’ போன்றது என்றும்… விதவிதமாக படம் வரைந்து பலமாதிரி வாதங்களுடன் தியரி சொல்கின்றனர்..! எது சரி..?


குர்ஆன் – 37:6  இறைவசனத்தில்…
முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.
நட்சத்திரங்கள் என்றால்… அது விண்மீன்கள்  அல்லது  ‘விண்மீன்கள் அடங்கிய கேலக்ஸிகள்’..! அதெல்லாம் சரி… இது என்னது..? “முதல்” வானம்…? அதாவது… ‘முதல் பிரபஞ்சமா’..? அப்படி என்றால்… இது நாம் வாழும் “முதல் அண்டம்” எனில், நம் அண்டத்துக்கு வெளியே வேறு அண்டங்களும் உண்டா..?
‘ஆம்’… சில/பல ‘இருக்கலாம்’ என்கின்றன அறிவியலின்… சில தியரிகள். ஆனால்,  Multiverse Bubble Universes Theory… அதில் ‘ஏழு அண்டங்கள்’ அடுக்கடுக்காக உள்ளதாகவும் கூறி வண்ணப்படம் போட்டு விவரிக்கிறது, Multiverse… எனும் ‘பல்லண்டம்’ கோட்பாடு..!

இந்த தியரியில் இரண்டு… மூன்று… ஆறு.. என்றெல்லாம் இல்லாமல்… அதென்ன கணக்கு ‘ஏழு’..? பல கணக்கீடுகளுக்கு பிறகு இத்தியரி சொல்லப்பட்டாலும், ஆச்சர்யம்தான் எனக்கு..! இது சரியாக இருக்குமா..? எண்ணற்ற பல விண்மீன் கேலக்ஸிகள் உள்ள நாம் வாழும் இந்த  பிரபஞ்சத்தைத்தான் “முதல் வானம்” என்று நம் யுனிவர்ஸ் (அண்டம்) பற்றி கூறும் இறைவன், இது அல்லாமல் மேலும் “ஆறு வானங்கள்” சேர்த்து 7  அண்டங்கள் இருப்பதை பற்றி குர்ஆனில் (விடைப்பக்கம்..!) குறிப்பிடுவதை காணலாம்..!
ஆனால், மேலே உள்ள படம் ‘தலைகீழாக’(?) உள்ளது என்று எனக்கு தோன்றுகிறது..! ஏனெனில், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக மிஹ்ராஜ் பயணம் ஹதீஸ் இதை தெளிவாக சொல்கிறது. (புஹாரி-3207) இதன்படி, நமது அண்டம்தான் கீழே இருக்குமாறு அந்த தியரியில் வரையப்பட்டிருந்திருக்க வேண்டும்..!
குர்ஆன் 71:15 இறைவசனத்தில்….
ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காக படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா..?
ஆகவே, அடுக்கடுக்கடுக்காக அண்டங்களை அடுக்க கோள வடிவ பிரபஞ்ச கோட்பாட்டை  விட, ‘நீள்கோள மாத்திரை’ அல்லது ‘தட்டை’ பிரபஞ்ச தியரிகள் ஓகே போல தெரிகின்றன..! எது எப்படியோ…! நம் முதல் அண்டத்தின் பிரம்மானடமே அத்துனை பெரியது என்றால்…. மற்ற 7-அண்டங்கள்… பல்லண்டம் எத்துனை  பிரம்மாண்டம்..? சொற்ப அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட நமக்கு ஏழு பிரபஞ்ச பிரமாண்டம் என்பது ஒரு நல்ல படம் வரையக்கூட கற்பனைக்கு எட்டாத ஒன்று. சுபஹானல்லாஹ்..!
நமது அண்டத்திலேயே நமக்கு தெரியாத நாம் இன்னும் நாம் அறிய முடியாத ஆற்றல்களும் அறியமுடியாத பொருள்களும் உள்ளன. அதை எல்லாம் கருப்பு ஆற்றல் (Dark Energy) கரும்பொருள் (Dark Matter) என்கின்றனர். நமது பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமாக சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் இது..! அண்டத்தில் நமக்கு தெரிந்தது….. 4% தானாம்…?!?!?!?!
பெருவெடிப்புக்கொள்கையின் படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து பல்வேறு வேகத்தில் (900 km/s வேகம் முதல்… ஒளியின் வேகமான 3,00,000  km/s யையும் தாண்டி… நாம் அறிந்து அதிகபட்சமாக 5,40,000 km/s வேகம் வரை) விரிவடைந்து கொண்டே போகிறது. இப்படி, நம் அண்டத்தின் கேலக்ஸிகள் இவ்வளவு வேகமாக ஒன்றை ஒன்று விலகி ஓட காரணமான ஆற்றல் எது..? அதுதான் Dark Energy எனப்படும் ‘கரிய ஆற்றலாம்’..!
பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி பார்த்தால் நம் பிரபஞ்சத்தின் 74% கரிய ஆற்றலும் 22% கரும்பொருளும் உள்ளது..! அண்டவெளியில் உள்ள வஸ்துக்கள் போக மீதி உள்ளவை எல்லாம் வெற்றுவெளி என்ற எண்ணமும் காணாமல் போய் விட்டது. அதை கரும்பொருள், கரிய ஆற்றல் எல்லாம் ஆக்கிரமித்துள்ளன..! No empty space in the Universe. Dark Matter fills the intergalactic space… என்கிறது நவீன அறிவியல்..! வெட்ட வெளியான ( vacuum ) வானத்தை எப்படி ‘படைக்க முடியும்’ என்று இன்னும் கேட்டுக்கொண்டு இருப்போரை பார்த்தால்… எனக்கு பரிதாபமாக இருக்கிறது சகோ..!
குர்ஆன் 50:38 இறைவசனத்தில்….
வானங்களையும், (சகோ,கவனிக்கவும்… பன்மை) பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக்களைப்பும் ஏற்படவில்லை.
எனவே, அந்த கரும்பொருள்.. கரிய ஆற்றல் தியரிகள் எல்லாம் சதவேத அளவில் வேறுபடலாமே அன்றி சரியான அனுமானங்கள்தான்..!
“ஒளியின் திசைவேகத்தை விட அதிகமான திசைவேகத்தை எந்த ஒரு பொருளும் அடையவே முடியாது” என ஐன்ஸ்டீன் உறுதியாக நம்பினார்..! ஆனால், அதெல்லாம் ஹப்பிள் காலத்தில் பழைய அறிவியல் ஆகிவிட்டது..! கருப்புஆற்றல் – இது அதிகரிக்க அதிகரிக்க காலம் மற்றும் இடப்பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு… ‘ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கும் அதிகமான வேகத்தை எல்லாம் அடைய முடியும்’ என்பது பிந்தைய அறிவியல் உலகின் நம்பிக்கை..! வேகுதூரே விலகிச்செல்லும் ’5.82 quasar’ எனும் ஒரு கருந்துளையின் வேகம்… ஒளியை விட 1.8 மடங்கு அதிகம் என்று அளக்கப்பட்டுவிட,அந்த நம்பிக்கையை இது உறுதி செய்துவிட்டது..!
‘Flashfront’..(!?)………Big Crunch theory……..!
இப்படி விரிவடையும் பிரபஞ்சம்… இப்படியே விரிவடைந்து கொண்டே செல்லாதாம்..! எதிர்காலத்தில் ஒருநாள் சுருங்கிவிடுமாம்..! அதை “பெரும் அண்டக்குழைவு” (Big Crunch) என்கின்றனர் விஞ்ஞானிகள்..! நமது பேரண்டத்தின் கடைசி விதியாக பிரபஞ்சவியல் வல்லுநர்கள் முன்வைக்கும் எதிரெதிரான கருதுகோள்களுள் ஒன்று இது..!
(மற்றவை: “Big Freeze”=விரிவடையும் அண்டம் இறுதியில் உறைந்துவிடும், “Big Rip”=விரிவடையும் அண்டம்  இறுதியில் கிழிந்துவிடும்.)
Big Crunch-படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டு மொத்தமாய் சுருண்டு சுருங்கி ஒரு ‘கருந்துளை’யாகி விடும்..! (பார்க்க:- கருந்துளை பற்றி விரிவாக எனது முந்திய பதிவு )

இதற்கு வாய்ப்பு இருக்கிறதா..? ஆம்..! இருந்தால், எப்போது எப்படி அது நடக்கும்..? குர்ஆன் 21:104 இறைவசனத்தில்….
எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவது போல் வானத்தை (கவனியுங்கள் சகோ… ஒருமையில் உள்ளது… ஒரு அண்டம் அழிக்கப்படுவது பற்றி மட்டுமே இவ்வசனம் கூறுகிறது…) நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
இவ்வசனத்தில்,  ‘கியாமத் நாள்’ எனப்படும் இறுதிநாளில், ஓர் அண்டத்தின் இறுதியாக அண்டக்குழைவு கோட்பாட்டை சரிகான்கிறோம். ஆனால், நான் தேடியவரை ‘பல்லண்டத்துக்கு ஒரு குழைவு கோட்பாடு’  ஒன்றை இன்னும் யாரும் வகுக்கவில்லை போல..! ஆனால், நமது விடைப்பக்கமான குர்ஆன் அதையும் அட்வான்சாகவே அதே கியாமத்நாளில்… ‘பல்லண்டத்திற்கு என்ன ஏற்படும்’ என சொல்லிவிடுவதையும் காண்கிறோம்..!
குர்ஆன் 39:67 இறைவசனத்தின் இடையில்…..
……கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் (கவனியுங்கள் சகோ… பன்மையில் உள்ளது… பல்லண்டம் அழிக்கப்படுவது பற்றி இவ்வசனம் கூறுகிறது...) அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்……
—என்று தெளிவாக அல்லாஹ் அறிவித்து விடுவதை காண்கிறோம்..!
இதுவரை  நாம் ஃப்ளாஷ்ஃபேக்கில் ‘பார்த்த(!)’ Big Bang மற்றும் ஃப்ளாஷ்ஃப்ரண்ட்டில் ‘பார்க்க(!)இருக்கும்’ Big Crunch ஆகிய இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த ஏழு அண்டங்களிலும் இருப்பவை  எல்லாம் அதனதன் வரையரையில் செவ்வனே சரியான அச்சில் சுழன்றும், துல்லியமான ஈர்ப்பு விசையில் ஒன்றை ஒன்று சுற்றியும், சீரான வேகத்தில் அனைத்தும் ஓடிக்கொண்டும் இருக்கின்றனவே… எப்படி…? இதெல்லாம் யாருடைய கட்டுப்பாட்டில் சாத்தியப்படுகிறது..?

வேறொரு கேலக்ஸியில் இருந்து பூமிக்கு அருகே UFO -வில் வரும் ஒரு Alien  (வேற்றுக்கிரக வாசி) நமது பூமிக்கு மேலே பறந்து கொண்டு இருக்கிற அத்தனை சேட்டிலைட்டுகளையும் பார்த்துவிட்டு, “இவை தானாக உருவாகி தானாவே அந்த கிரகத்தை சுற்றி வரும் துணைக்கோள் தூசிக்கூட்டம் போல…” என்று நினைத்தால்… அது அறிவுடைமையா..? கஷ்டப்பட்டு அவற்றை எல்லாம் செய்து விண்ணுக்கு அனுப்பிய நாசா, இஸ்ரோ போன்ற உலகநாட்டு சேட்டிலைட் ஏவுதள விஞ்ஞானிகள் இப்புரிதலை சரியென சகித்துக் கொள்வார்களா ..? குர்ஆன் 35:41 இறைவசனத்தில்….
வானங்களும்,(கவனியுங்கள் சகோ… பன்மையில் உள்ளது) பூமியும் இடம் பெயராதபடி அ(இறை)வனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத்தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத்தன்மை உடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
ஆனால் இதனை நம்புவர்கள் எப்படிப்பட்டவர்களாம்..?
குர்ஆன் 32:15 இறைவசனத்தில்….
நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனை புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்..!
சுப்ஹான ரப்பியல் அஃலா…. ‘உயர்வான எனது இரட்சகன் தூய்மையானவன்’
References:
http://corpus.quran.com
http://www.tamilquran.in
http://www.searchtruth.com
http://www.islamawakened.com
http://en.wikipedia.org/wiki/Big_Bang
http://en.wikipedia.org/wiki/Dark_energy
http://www.messagetoeagle.com/darkmatt.php
http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe
http://www.wonderquest.com/ExpandingUniverse.htm
http://en.wikipedia.org/wiki/Multiverse#Bubble_theory
http://www.sunniforum.com/forum/archive/index.php/t-14343.html
http://www.chemteam.info/Thermochem/Law-Cons-Mass-Energy.html
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://news.nationalgeographic.com/news/2005/11/1102_051102_black_hole.html

நன்றி : http://chittarkottai.com/

Thursday, July 4, 2013

மார்க்க வியாபாரிகளே - திருந்திக்கொள்ளுங்கள்

மார்க்க வியாபாரிகளே - திருந்திக்கொள்ளுங்கள்

ithawheed.blogspot.com
9:9
அவர்கள்   அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்)   வழியிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை   மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9)

9:34
நம்பிக்கைக் கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரியிலும்,துறவிகளிலும்…   அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின்   பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும்,   வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில்   செலவிடாதிருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!)   நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 9:34)
3:187

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க   வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு   நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப்   பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக்   கொண்டார்கள் – அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.   (அல்குர்ஆன் 3:187)

5:63
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள்   உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க   வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.   (அல்குர்ஆன் 5:63)
  அல்லாஹ் இறக்கியருளிய நேர்வழியை மிகமிக   சொற்பமானவர்களே விளங்குவார்கள்;  மிகமிகக் குறைந்தவர்களே விளங்குவார்கள்   என்று அல்குர்ஆனில் ஆணித்தரமாக அல்லாஹ் அறிவிக்கிறான்.

7:3
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்;   அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்;   நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.    (அல்குர்ஆன் 7:3)
இந்த மிகமிக சொற்பமான சுவர்க்கம் செல்லும் மக்கள் அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான   ஹதீஸ்களையும் நேரடியாக விளங்கி அதன்படி நடக்கிறார்கள். இவர்களே அல்லாஹ்வின்   நன்மாராயம் பெற்றவர்கள், பாக்கியசாலிகள், அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று   சுவர்க்கம் செல்கிறவர்கள்.
இதற்கு மாறாக மக்களில் மிகமிகப் பெருங்கொண்ட கூட்டம் அல்குர்ஆனையும்,   ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் விளங்கக் கூடியவர்களாக இல்லை. நரகத்தை நிரப்புவதற்காகவே   செயல்படுகிறவர்கள். இதையும் அல்குர்ஆன் அதிகமான இடங்களில் சுட்டிக்காட்டுகிறது.   அவை வருமாறு:

17:89
“நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகத்   தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் (இதை)   நிராகரிக்காதிருக்கவில்லை. (17:89)

25:30
“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து   ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)
குறிப்பாக இந்த இறைவாக்குகளை மீண்டும், மீண்டும் படித்து உள்வாங்கி ஆழ்ந்து   சிந்தியுங்கள். அல்குர்ஆன் மனிதர்களில் ஆண், பெண் அனைவரும் விளங்கும் நிலையில்   இறக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அரபி மொழி படித்த  மட்டுமே விளங்க   முடியும் என வாதிப்போர் ஷைத்தானின் தோழர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிய   முடியும்.
அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் செல்லும் மக்கள் மிகமிகக் குறைவு.   அவர்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாக விளங்கி அதன்படி நடப்பார்கள். மார்க்கத்தைப்   பிழைப்பாகக் கொண்டவர்களின் வலையில் சிக்க மாட்டார்கள்!  மார்க்கத்தைப்   பிழைப்பாகக் கொண்டவர்கள் அல்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் உள்ளதை   உள்ளபடி எடுத்துச் சொல்ல முன் வரமாட்டார்கள்.
அதனால்தான் மார்க்கத்தைப் பிழைப்பாக்கி, தொண்டை தொழிலாக்கி வயிற்றை நிரப்ப    குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி சொல்லாமல், கோணல் வழிகளான  கற்பனைகளை   மக்களுக்குப் போதிக்கின்றனர்.

11:18
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்?   அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்; இவர்கள் தாம்   தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்;   இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். (11:18)
எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒரு போதும்   நேர்வழியை – குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது. அனைத்து   நபிமார்களையும் மக்களிடம் கூலியை எதிர்பார்த்துச் செயல்படாமல், சொந்த உழைப்பைக்   கொண்டு வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லாஹ்   கட்டளையிட்டிருப்பதின் இரகசியம் இதுதான்.

36:21
“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே   நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).    அல்குர்ஆன் யாஸீன் (36:21)
  இறைவாக்கு இதையே மிகமிக உறுதியாக கூறுகிறது.   மக்களிடம் கூலியை – சம்பளத்தை எதிர்பார்க்காமல், அல்லாஹ்வுக்காக மட்டுமே மார்க்கப்   பணி செய்கிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்க முடியும். அதற்கு மாறாக   சம்பளத்திற்காக மார்க்கப்பணி புரிகிறவர்கள் ஒரு போதும் நேர்வழியைப் போதிக்க   மாட்டார்கள். காரணம் நேர்வழி செல்லும் சொற்பமான மக்களைக் கொண்டு அவர்களின்   நோக்கம் நிறைவேறாது. சம்பளத்திற்காக நரகம்செல்லும் அதிகமான மக்களைக் கவர்வதாக   இருந்தால், அவர்கள் விரும்பும் கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதிக்கும் கட்டாயம்   ஏற்படுகிறது.
புரோகிதரர்கள் வழிகேடுகளையே நேர்வழியாக – மார்க்கமாகப் போதிக்கும் காரணம்   இப்போது சுய சிந்தனையாளர்களுக்கு,  நிச்சயமாக புரிந்திருக்கும்.   முஸ்லிம்கள்   அல்குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் நேரடியாகப் படித்து விளங்கிச் செயல்பட்டால் மட்டுமே   ஈடேற்றம் பெற முடியும். அல்லாஹ் அருள் புரிவானாக!

Ori Source : http://www.readislam.net/portal/archives/5648

Sunday, April 28, 2013

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்


இஸ்லாம்

அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்:
எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்: அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம். மேலும் (சுவனத்தில்) உங்கள் மன ம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம்; உங்களுக்குக் கிடைக்கும். இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும்! (41:30-32)
திண்ணமாக எவர்கள் அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இத்தகையவர்களே சுவனம் செல்பவர்களாவர். உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் பலனாக அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள். (46:13,14)
இந்த வசனங்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற வசனங்களிலிருந்தும் மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதனால் ஏற்படும் சில நன்மைகளை நாம் பெறமுடிகின்றது. அவை வருமாறு:
1-அல்லாஹ்வுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு ஏற்படுவதோடு உள்ளத்திற்கு அமைதியும் மனதிற்கு நிம்மதியும் ஏற்படுகின்றது. எவ்வாறென்றால் உறுதியாக இருப்பவன் அல்லாஹ்வின் கடமைகளை அறிந்து அதன் பிரகாரம் அவன் திருப்திகொள்ளும் விதத்தில் அவன் நடந்து கொள்கின்றான்.
2- எவர்கள் அல்லாஹ் எங்கள் இறை வன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலை த்து நிற்கின்றார்களோ… அதாவது எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் சொல்லாலும் செயலாலும் தூய்மையாக நடந்தார்களோ…என்று அல்லாஹ் அவர்களைப் புகழ்கின்றான்.
3-மரண நேரத்தில் இத்தகையவர்கள்மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்கள் தம் கப்ருகளிலிருந்து வெளிவரும்போது மறுமைக்காக நீங்கள் செய்தவற்றுக்காகவும் உலகத்தில் நீங்கள் விட்டுவந்த சொத்து சுகம் மற்றும் பிள்ளைகள்; குடும்பத்தார்களுக்காகவும் நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என்று அவ்வானவர்க ள் நற்செய்தி கூறுவார்களாம்.
4-அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் அவர்களுக்கு உண்டு என்ற வானவர்களின் நற்செய்தி கிடைக்கும். ”உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்” என்று அவ்வானவர்கள் கூறுவார்கள்.40:30
5-இவ்வுலகிலும் மறுவுலகிலும் வானவர்களின் துணை கிடைக்கும். இவ்வுலகில் அவர்கள் பாவங்களிலும் தவறுகளிலும் விழுந்து விடாதவாறு வானவர்கள் பாதுகாப்பார்கள். மேலும் அவர்களை நெறிப்படுத்துவார்கள். மறுமையில் அவர்கள் கப்ரிலிருந்து வெளிவரும்போது சுவனம் செல்லும் வரை அவர்களை அவ்வானவர்கள் வரவேற்பார்கள். ”இந்த உலக வாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்”. (அல் குர்ஆன்)
6-உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அருளால் சுவனத்தில் அவர்களுடைய உள்ளங்கள் எதை விரும்புகின்றனவோ அவர்களுடைய கண்களுக்கு எது குளிர்ச்சியாக இருக்கின்றதோ அவர்களுடைய நாவுகள் எதைக் கேட்கின்றனவோ அவை அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். ”உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கின்றது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்”". (அல்குர்ஆன்)
7-இந்த உறுதிப்பாடு அல்லாஹ்வுக்குப் பிறகு அவர்களைப் பாவங்களிலும் மோசமான காரியங்களிலும் விழுந்துவிடாமல் பாதுகாப்பதோடு மோசமான மக்களுடன் கூட்டுச் சேர்வதைவிட்டும் வணக்க வழிபாட்டில் சோம்பல் காட்டுவதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும்.
தற்போது இஸ்லாமிய சமுதாயம் மார்க்கத்தில் பலவகையான சந்தேகங்களும் அவரவர் தம் மனோச்சையின்படி நடந்துகொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கின்றது. இதன் காரணமாக மார்க்கம் நூதனமாக ஆகிவிட்ட தோடு அதைப் பின்பற்றக்கூடியவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல ஒரு நூதனமான உதாரணத்தைப் போலாகிவிட்டனர்.
அதாவது மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர் நெருப்பைப் பற்றிப்பிடிப்பவரைப் போல்ஆகி விடுவார்.(நபிமொழி)
கடந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விட இன்றைய முஸ்லிம்களுக்குத்தான் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள் அதிகம் தேவைப்படுகின்றன . இவ்வுறுதியைப் பெறுவதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. காரணம் காலம் கெட்டுக்கிடக்கின்றது. உண்மையான சகோதரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். உத வக்கூடியவர்கள் பலவீனமாகவும் ஒத்துழைக்கக்கூடியவர்கள்

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...