3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின்வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

Saturday, September 17, 2011

முஃமின்களே ! தாழ்த்திக் கொள்ளுங்கள் பார்வைகளை...

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் 24:30)

நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள்:
கண்ணின் விபச்சாரம் -தவறானதைப்- பார்ப்பதாகும்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ)

திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பது, மருத்துவர், மருத்துவத்திற்காக அன்னியப் பெண்ணைப் பார்ப்பது போன்ற மார்க்கத் தேவைக்காக, நிர்ப்பந்தத்திற்காக பார்ப்பது இதிலிருந்து விதிவிலக்குப் பெரும்.

இது போல் பெண்கள் அன்னிய ஆண்களைப் பார்ப்பதும் தவறாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல்குர்ஆன் 24:31)

ஒரு ஆணோ, பெண்ணோ தம் இனத்தைச் சேர்ந்த அழகானவர்களை இச்சையுடன் பார்ப்பது ஹராமாகும். மேலும் ஒரு ஆணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற ஆண் பார்ப்பதும், ஒரு பெண்ணின் மறைக்கவேண்டிய பகுதியை மற்ற பெண் பார்ப்பதும் ஹராமாகும். மறைக்கவேண்டிய எந்தப் பகுதியையும் பார்ப்பதோ, தொடுவதோ கூடாது -அது ஏதேனும் திரைக்குப் பின்னால் இருந்தாலும் சரியே!-.

பத்திரிக்கைகளில் வரும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் திரைப்படங்களின் மூலம் ஷைத்தான் பலரை இதுபோன்ற மானக்கேடான செயல்களில் ஈடுபடுத்துகிறான். நிச்சயமாக அவைகள் உண்மையானவைகள் அல்ல, மேலும் குழப்பத்திற்கும் இச்சையை தவறான முறையில் தீர்ப்பதற்கும் வழிவகுக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

2 comments:

  1. இன்றைய காலகட்டத்திற்கு இது தொடர்பிலான கருத்துக்கள் தொடராக இடம்பெறல் வேண்டும். செய்வீரகளா?

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா....
    இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன்.....
    அல்லாஹ்விடம் துஆ செய்து கொள்ளுங்கள்....

    ReplyDelete

வழிகாட்டிய இறைவனோடு வலுவான தொடர்பு - அப்துர்ரஹ்மான் உமரி

  ithawheed.blogspot.com ரமழானில் மாதத்தில் நாம் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் இது. இறைவனோடு நாம் கொண்டுள்ள தொடர்பு எந்நில...